Thursday, November 11, 2010

எனக்காய் பூமியில் வந்த சாமியம்மா நீ


எனக்காய் பூமியில் வந்த சாமியம்மா நீ
சுயமாய் ஒரு உரு தந்தாய்
சுவாசம் கற்று தந்தாய்
உள்ளோடும் உதிரத்தில் கலந்திருந்தாய்
தள்ளாட்ட நடையில் என்னை தளுவியிருந்தாய்
அழாமல் ஆகாரம் தந்தாய்
அழும் முன்னே ஆறுதல் தந்தாய்
என் சுமைகள் இறக்கி வைத்து
உன் சுமைகள் ஏற்றி கொண்டாய்
என்னை சிரிக்க வைக்க உன் சிரிப்பு மறந்து
என்னை உறங்க வைக்க உன் உறக்கம் மறந்து
எனக்காகவே பூமியில் வந்த சாமியம்மா நீ ..

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...