Saturday, November 13, 2010

வா தாத்தா




உன் உடல்
வேக நடையில்
வெள்ளி வியர்வையில்
குளித்த உடம்பு தானே தாத்தா ..
சிலம்பு சண்டையில்
சுற்றும் சிலம்பின்
சூட்டில் பட்ட காயங்கள் கொண்ட உடம்பு தானே தாத்தா..
மூக்கு கயிறு அறுந்த மாட்டை
முன் நின்று அடக்கி
கூர் கொம்பு கிழித்த
காயம் காட்டுவாயே அந்த உடம்பு தானே தாத்தா..
ஆயா'வை பெண் பார்த்து வந்து
தெரியாமல் அவளை பார்க்க போய்
சுவற்றில் அவள் உடல் சாய்த்து
கழுத்தில் உன் இதழ் தோய்த்து
அவள் விலக , நீ இழுக்க
மேலிருந்த பூனை
பயந்து உன் மீள் விழுந்து
கீறிய தழும்பு காட்டினாயே எங்கே தாத்தா அது ....
ஏன் இப்படி ஏதும் பேசாமல் இருக்கிறாய் ..!!!
நான் யானை ஏறி உதைத்த போது
அசையாத உன் தோள்கள்
ஏன் இப்போது சாய்ந்து கிடக்கிறது ..???
வா தாத்தா
அப்பா
அம்மா
ஆயா
எல்லோரும் அழுகிறார்கள் பார்
எழுந்து வா தாத்தா .....!!!


No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...