Friday, November 12, 2010

கொஞ்சம் அலங்காரம் போடு .


அலைகின்ற மேகங்கள்
அவள் கூந்தல் நிலையென்று அழகாக நான் சொன்னேன் ..
தலை தேய்த்து குளித்ததோ தரமான ஷாம்பென்று
தயங்காது நீ சொன்னாய் ...!!!
வானத்து நிலவொளிதான் வந்திறங்கிய
வடிவுந்தன் முகமென்று வர்ணித்து நான் சொன்னேன் ...
என் முக பொலிவுக்கு இதுவன்றோ
எனவென்று ட்யூப்க்குள் பூட்டி வைத்த திரவத்தை காட்டினாய் ...!!!
அதர சிவப்புக்கு அத்தி பழம் நிகரில்லை
அடித்து நான் சொன்னேன் ..
வண்ண பொருள் ஒன்றே
வனப்புக்கு காரணமாய் அமைந்த கதை நீ சொன்னாய் ...!!!
செம்மேனி அழகோடு சேர்ந்திருக்கும் மனம் கண்டு
எந்த மலர் இதுவென்று
ஏதும் புரியாது நான் இருந்தேன் ..
வெளிநாட்டு திரவம் இது வெளிகொணரும் மனம் இதுவென்று
வேடிக்கை பதில் சொன்னாய் ...!!!
அலங்காரம் , அரிதாரம்
அழகென்ற அகங்காரம்
மேனி வனப்புக்கு செலவுகளோ ஆயிரமாயிரம் ...
ஊரார் புகழ் பேச .. புறம் பூசும் ...
உன் அலங்காரம் போதும்
ஊரார் உன் அகம் பேச ..
கொஞ்சம் அலங்காரம் போடு ...

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...