Friday, December 31, 2010

அறிவியல் காதலி


இதயம் துடிப்பது உன்னால் என்றேன் ..
Cardiac muscle contraction  என்றாய் !

நுரையீரல் சுவாசம் நீயே என்றேன்
ALVEOLI  நடத்தும் வாயு பரிமாற்றம் என்றாய் !

விழியின் பார்வை நீயடி என்றேன்
VISUAL AREA-வின்  விளையாட்டு   என்றாய் 

கேட்கும்   திறனும் நீயே என்றேன்
AUDITORY AREA - வின் ஆர்டர் என்றாய் !

எந்தன் தோலின் தொடு உணர்வு தேவியின் நினைவே என்றேன்
SOMATO SENSORY AREA STIMULATION என்றாய் !

உறுப்புகள் இயக்கம் உன்னசைவால் என்றேன்
SKELETAL MUSCLES-ன்  அசைவே என்றாய் !

உள்ளோடும் உதிரம்  உந்தன் அன்பு என்றேன்
PLASMA , WBC , RBC , PLATELETS சேர்ந்த கலவை என்றாய் !

உண்ணும் உணவின் ருசி உந்தன் விரலின் சுவையே என்றேன்
GLUCOSE , PROTEIN , LIPID , MINERAL -ன் சேர்க்கை என்றாய் !

என்னில் நிகழும் மாற்றங்கள் எல்லாம் உன் ஓர விழியால் என்றேன்
ENDOCRINE GLANDS -ன் எக்கு தப்பான வேலை என்றாய் !

நான் ஆண்மை கொண்டது உன்னால் என்றேன்
ANDROGEN , TESTROGEN சேவை என்றாய் !

என் நினைவுகள் யாவும் நீயே என்றேன்
அதற்கு காரணமே BRAIN தான் என்றாய் !

அறிவியல் கற்ற உனக்கு
அடியேனின் கற்பனைகள்
அற்பமாய் தோன்றினாலும்
அழிக்க முடியாது
என்னில் உன்னை ..
என் ஆயுள் இருக்கும் வரை ..
 

Saturday, November 13, 2010

சிவப்பு பாம்பும் .. வெற்றிலை பாக்கும்



வெள்ளை நிற பனியனில்
வெற்றிலை பாக்கு எச்சில்
விட்டு விட்டு துப்பியது போல்
சட்டை அணிந்த அவனும் ...
சிவப்பு பாம்புகளாய்
சின்ன சின்ன கோடுகளால் நிறைந்த
மலை மேல் மூடிய துணியாய்
மார்பிரண்டின் அழகு காட்டும்
மஞ்சள் நிற சுடிதார் அணிந்த அவளும் ...
கருப்பு மேகங்கள்
வெள்ளை மழை பொலியும்
மஞ்சள் மாலையில்
செம்மண் சாலையில்
எதிரெதிராய் நடந்து வந்தனர் ..!!!

வா தாத்தா




உன் உடல்
வேக நடையில்
வெள்ளி வியர்வையில்
குளித்த உடம்பு தானே தாத்தா ..
சிலம்பு சண்டையில்
சுற்றும் சிலம்பின்
சூட்டில் பட்ட காயங்கள் கொண்ட உடம்பு தானே தாத்தா..
மூக்கு கயிறு அறுந்த மாட்டை
முன் நின்று அடக்கி
கூர் கொம்பு கிழித்த
காயம் காட்டுவாயே அந்த உடம்பு தானே தாத்தா..
ஆயா'வை பெண் பார்த்து வந்து
தெரியாமல் அவளை பார்க்க போய்
சுவற்றில் அவள் உடல் சாய்த்து
கழுத்தில் உன் இதழ் தோய்த்து
அவள் விலக , நீ இழுக்க
மேலிருந்த பூனை
பயந்து உன் மீள் விழுந்து
கீறிய தழும்பு காட்டினாயே எங்கே தாத்தா அது ....
ஏன் இப்படி ஏதும் பேசாமல் இருக்கிறாய் ..!!!
நான் யானை ஏறி உதைத்த போது
அசையாத உன் தோள்கள்
ஏன் இப்போது சாய்ந்து கிடக்கிறது ..???
வா தாத்தா
அப்பா
அம்மா
ஆயா
எல்லோரும் அழுகிறார்கள் பார்
எழுந்து வா தாத்தா .....!!!


Friday, November 12, 2010

கொஞ்சம் அலங்காரம் போடு .


அலைகின்ற மேகங்கள்
அவள் கூந்தல் நிலையென்று அழகாக நான் சொன்னேன் ..
தலை தேய்த்து குளித்ததோ தரமான ஷாம்பென்று
தயங்காது நீ சொன்னாய் ...!!!
வானத்து நிலவொளிதான் வந்திறங்கிய
வடிவுந்தன் முகமென்று வர்ணித்து நான் சொன்னேன் ...
என் முக பொலிவுக்கு இதுவன்றோ
எனவென்று ட்யூப்க்குள் பூட்டி வைத்த திரவத்தை காட்டினாய் ...!!!
அதர சிவப்புக்கு அத்தி பழம் நிகரில்லை
அடித்து நான் சொன்னேன் ..
வண்ண பொருள் ஒன்றே
வனப்புக்கு காரணமாய் அமைந்த கதை நீ சொன்னாய் ...!!!
செம்மேனி அழகோடு சேர்ந்திருக்கும் மனம் கண்டு
எந்த மலர் இதுவென்று
ஏதும் புரியாது நான் இருந்தேன் ..
வெளிநாட்டு திரவம் இது வெளிகொணரும் மனம் இதுவென்று
வேடிக்கை பதில் சொன்னாய் ...!!!
அலங்காரம் , அரிதாரம்
அழகென்ற அகங்காரம்
மேனி வனப்புக்கு செலவுகளோ ஆயிரமாயிரம் ...
ஊரார் புகழ் பேச .. புறம் பூசும் ...
உன் அலங்காரம் போதும்
ஊரார் உன் அகம் பேச ..
கொஞ்சம் அலங்காரம் போடு ...

எப்போது நீ வருவாய்


நான் அணிந்த பட்டுசேலை
நீ ஆடும் தூளியாக மாறும் ...
என் உடல் உதிரங்கள்
உனக்கான உணவாய் மாறும் ..
என் கையின் வளை ஒலிகள்
உன் செவிக்கு இசை சாரல் தூறும் ..
வானத்து வெண்ணிலவு
உன் இரவு உணவுக்கு துணையாக வந்து சேரும் ...
என் இதழ் ஈரங்கள்
உன் கன்னத்தில் ஊறும் ...
பொழுதெலாம் நீ சிரிக்க
உன் சிரிப்பில் உலகம் நான் மறக்க
எப்போது என் வயிற்றில் கரு வந்து சேரும் ...

அழுக்காய் அழகாய்


அப்படி என்னவொரு ஆசையோ தெரியவில்லை
அம்மணமாய் திரிவதில் ..
அழகான சட்டை போட்டு
அலங்காரம் செய்துவித்து
அனுப்புவாள் அம்மா
வீதிக்கு விளையாட ...
தெரு மண்ணில் உடை புரட்டி
உடல் எங்கும் மணல் புரட்டி
உடுத்தியிருந்த உடை அவிழ்த்து
வீடு நான் திரும்புகையில் ...
கோபம் கொண்டு
அம்மா
அடித்தாலும் , திட்டினாலும்
அவள் ஆடை அணிவிக்கவும் ,
அலங்காரம் செய்யவும் தவறுவதில்லை ...
நான்
ஆடை அவிழ்த்து அழுக்கில் புரட்டாமல் விடுவதில்லை ...

Thursday, November 11, 2010

எனக்காய் பூமியில் வந்த சாமியம்மா நீ


எனக்காய் பூமியில் வந்த சாமியம்மா நீ
சுயமாய் ஒரு உரு தந்தாய்
சுவாசம் கற்று தந்தாய்
உள்ளோடும் உதிரத்தில் கலந்திருந்தாய்
தள்ளாட்ட நடையில் என்னை தளுவியிருந்தாய்
அழாமல் ஆகாரம் தந்தாய்
அழும் முன்னே ஆறுதல் தந்தாய்
என் சுமைகள் இறக்கி வைத்து
உன் சுமைகள் ஏற்றி கொண்டாய்
என்னை சிரிக்க வைக்க உன் சிரிப்பு மறந்து
என்னை உறங்க வைக்க உன் உறக்கம் மறந்து
எனக்காகவே பூமியில் வந்த சாமியம்மா நீ ..

Monday, September 13, 2010

கணக்கு பாடம்

கணக்கு பாடம் நன்றாக தான் இருந்தது,

அப்பா நான் கணக்கில் நூற்றுக்கு நூறு என பெருமையாக சொல்லிக்கொள்ள ஆசைபட்ட்டார்

டீச்சர் கணக்கில் தான் மிக சுலபமாக நூறு எடுக்க முடியும் என சொன்னார்,

டியூஷன் வைக்க சொன்னார்கள்

இரவுகளில் படிக்கச் சொன்னார்கள்

என் அப்பாவும் என்னோடு கண் விழித்தார்

எத்தனை ரப் நோட்கள்

எத்தனை வெள்ளை தாள்கள்

எத்தனை இரவுகள்
லிப்டன் டீ தூள் கால் கிலோ காலியானது
எலெக்ட்ரிக் பில் 250 ருபாய் அதிகமானது
அந்த வெயில் கால காலை பத்து மணி
நான் நூற்றுக்கு நூறு கணக்கில் வாங்குவதற்காக பிரத்யேகமாக வந்தது எழுதினேன் .. வாங்கினேன் .....
ஆனால் இன்னும் எனக்கு புரியவில்லைநான் படித்த [a+b ] 2 க்குஎன அர்த்தம் ?

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...