Monday, August 11, 2008

குரலில்லாமல் தவிக்கும்
ஊமைகளுக்கு
உன் குரலை கொடுத்துவிடலாம் ! !
உடல் மொழி
விழி மொழி
இதழ் மொழியென
எத்தனை மொழிதான்
ஒருத்தி பேசுவது ...

கொதிக்கும் எண்ணெய் சட்டியில்
கடலை மாவில் தோய்த்த
வாழைக்காய்கள்
நனையும்போது
எழும் வாசனைக்கு
சட்டைப்பை
சில்லறையை
தடவும் விரல்கள் ....

Sunday, August 3, 2008

மரப்பலகையில் அமர்ந்து
தினசரி படித்தவாறு
சாலையில் விரையும்
வாகனங்களை வெறித்தவாறு
கண்ணாடிதம்ளர்களில்
தேநீர் உறிஞ்சிக் குடிப்பது
ஆண்களுக்கு மட்டுமென
வரம் தந்தது யார் ... !

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...