Friday, November 12, 2010
எப்போது நீ வருவாய்
நான் அணிந்த பட்டுசேலை
நீ ஆடும் தூளியாக மாறும் ...
என் உடல் உதிரங்கள்
உனக்கான உணவாய் மாறும் ..
என் கையின் வளை ஒலிகள்
உன் செவிக்கு இசை சாரல் தூறும் ..
வானத்து வெண்ணிலவு
உன் இரவு உணவுக்கு துணையாக வந்து சேரும் ...
என் இதழ் ஈரங்கள்
உன் கன்னத்தில் ஊறும் ...
பொழுதெலாம் நீ சிரிக்க
உன் சிரிப்பில் உலகம் நான் மறக்க
எப்போது என் வயிற்றில் கரு வந்து சேரும் ...
Subscribe to:
Post Comments (Atom)
முத்தம்
உன் மீதான என் அன்பு, என் பிரியங்கள் , மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன் . நீ உதடு அழுத்தி கொடுத்த ஒரு முழு முத்தம் என், எ...
-
வைரமுத்து தேனி தந்த தமிழ்தேனீ திரைத்தமிழ் ஒருபடி மேல் நோக்கி நகர தமிழ்த்தாய் பெற்றெடுத்த ஏணி .. சங்கத்தமிழ் , பாரதிதமிழ் கண்ணதா...
-
இதயம் துடிப்பது உன்னால் என்றேன் .. Cardiac muscle contraction என்றாய் ! நுரையீரல் சுவாசம் நீயே என்றேன் ALVEOLI நடத்தும் வாயு பரிமா...
-
JK ஜெயகாந்தன் ஒரு நூற்றாண்டின் எழுத்தாளர்.. ஜெயகாந்தன் கம்பீரத்தின் அடையாளம் .. ஜெயகாந்தன் புனைவு மட்டுமே எழுத்தாகும் அபாயத்திலிருந்த...
No comments:
Post a Comment