Friday, November 12, 2010

எப்போது நீ வருவாய்


நான் அணிந்த பட்டுசேலை
நீ ஆடும் தூளியாக மாறும் ...
என் உடல் உதிரங்கள்
உனக்கான உணவாய் மாறும் ..
என் கையின் வளை ஒலிகள்
உன் செவிக்கு இசை சாரல் தூறும் ..
வானத்து வெண்ணிலவு
உன் இரவு உணவுக்கு துணையாக வந்து சேரும் ...
என் இதழ் ஈரங்கள்
உன் கன்னத்தில் ஊறும் ...
பொழுதெலாம் நீ சிரிக்க
உன் சிரிப்பில் உலகம் நான் மறக்க
எப்போது என் வயிற்றில் கரு வந்து சேரும் ...

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...