Friday, November 12, 2010

அழுக்காய் அழகாய்


அப்படி என்னவொரு ஆசையோ தெரியவில்லை
அம்மணமாய் திரிவதில் ..
அழகான சட்டை போட்டு
அலங்காரம் செய்துவித்து
அனுப்புவாள் அம்மா
வீதிக்கு விளையாட ...
தெரு மண்ணில் உடை புரட்டி
உடல் எங்கும் மணல் புரட்டி
உடுத்தியிருந்த உடை அவிழ்த்து
வீடு நான் திரும்புகையில் ...
கோபம் கொண்டு
அம்மா
அடித்தாலும் , திட்டினாலும்
அவள் ஆடை அணிவிக்கவும் ,
அலங்காரம் செய்யவும் தவறுவதில்லை ...
நான்
ஆடை அவிழ்த்து அழுக்கில் புரட்டாமல் விடுவதில்லை ...

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...