இயக்குனர் வஸந்த் .. வண்ணங்களை காகிதங்களில்
தோய்க்கும் ஓவியராய், எண்ணங்களின் வண்ணங்களை
பிலிம் சுருளுக்குள் நேர்த்தியோடும் , நேர்மையோடும் வரையும் ..., நவீனத்தையும் , மரபையும் ,கண்ணாடி அணிவித்து , அலங்காரம் பூசி காட்டாமல் உள்ளது உள்ளபடி காட்டும்...
, வார்த்தைகளின் வலிகளையும் ,
உணர்வுகளின்
நெகிழ்ச்சியையும், செல்லுலாய்டில் செதுக்கும் சிற்பக்காரர் .
இடுப்பு நடனங்கள் , இறுக்க தழுவல்கள் , இரட்டை அர்த்தங்கள் , ஸ்லீவ் லெஸ் கைகள் , பேன்ட்லெஸ் கால்கள் மட்டுமே மாறி மாறி காட்டப்படும் ஐந்து நிமிட பாடல் காட்சியில் , தண்ணீரையும் , காற்றையும் , ஆகாயத்தையும் , மண்ணையும் , தீயையும் , அழகியல் குறையாமல் , ஆகிருதி குறையாமல் காட்டி ஐம்பூதங்களை ஐந்து நிமிட பாடல் காட்சிகளின் கதாநாயகன் ஆக்கிய பராக்கிரமசாலி.
கேளடி கண்மணியில் குழந்தையின் நோக்கில் தாய் தந்தை பாசத்தின் சமநிலை காட்டி எல்லோர் கண்களிலும் கண்ணீர் துளிகளை பூக்க வைத்து , அதை தென்றலாய் இசை சாரலோடு உலர வைத்து ஆரம்பித்த வஸந்த காற்று , நீ பாதி நான் பாதி , ஆசை , நேருக்கு நேர் , பூவெல்லாம் கேட்டுப்பார், அப்பு , ரிதம் , ஏய் நீ ரொம்ப அழகாயிருக்க , சத்தம் போடாதே , என்று தொடர்கிறது .. திரையில் இலக்கியத்தையும் , இலக்கியத்தில் திரையையும் அதனதன் பராக்கிரம் குறையாமல் படைக்கும் வித்தையில் விளைந்த முத்துக்களின் பட்டியலில் , தக்கையின் மீது நான்கு கண்கள் , விசாரணை கமிஷன் என்ற சா. கந்தசாமியின் படைப்புகள் செல்லுலாய்டில் வீரியமாய் விதைக்கப்பட்ட விதைகள் ...
இடுப்பு நடனங்கள் , இறுக்க தழுவல்கள் , இரட்டை அர்த்தங்கள் , ஸ்லீவ் லெஸ் கைகள் , பேன்ட்லெஸ் கால்கள் மட்டுமே மாறி மாறி காட்டப்படும் ஐந்து நிமிட பாடல் காட்சியில் , தண்ணீரையும் , காற்றையும் , ஆகாயத்தையும் , மண்ணையும் , தீயையும் , அழகியல் குறையாமல் , ஆகிருதி குறையாமல் காட்டி ஐம்பூதங்களை ஐந்து நிமிட பாடல் காட்சிகளின் கதாநாயகன் ஆக்கிய பராக்கிரமசாலி.
கேளடி கண்மணியில் குழந்தையின் நோக்கில் தாய் தந்தை பாசத்தின் சமநிலை காட்டி எல்லோர் கண்களிலும் கண்ணீர் துளிகளை பூக்க வைத்து , அதை தென்றலாய் இசை சாரலோடு உலர வைத்து ஆரம்பித்த வஸந்த காற்று , நீ பாதி நான் பாதி , ஆசை , நேருக்கு நேர் , பூவெல்லாம் கேட்டுப்பார், அப்பு , ரிதம் , ஏய் நீ ரொம்ப அழகாயிருக்க , சத்தம் போடாதே , என்று தொடர்கிறது .. திரையில் இலக்கியத்தையும் , இலக்கியத்தில் திரையையும் அதனதன் பராக்கிரம் குறையாமல் படைக்கும் வித்தையில் விளைந்த முத்துக்களின் பட்டியலில் , தக்கையின் மீது நான்கு கண்கள் , விசாரணை கமிஷன் என்ற சா. கந்தசாமியின் படைப்புகள் செல்லுலாய்டில் வீரியமாய் விதைக்கப்பட்ட விதைகள் ...
[இயக்குனர் வஸந்த் பற்றி ஆய்வரங்கில் நான் எழுதி வாசித்த கட்டுரையின் இனிய பதிவு உங்கள் பார்வைக்கு..
No comments:
Post a Comment