Sunday, April 12, 2015

வஸந்த்

இயக்குனர்  வஸந்த் .. வண்ணங்களை காகிதங்களில் தோய்க்கும் ஓவியராய், எண்ணங்களின் வண்ணங்களை பிலிம் சுருளுக்குள் நேர்த்தியோடும் , நேர்மையோடும் வரையும் ..., நவீனத்தையும்  , மரபையும் ,கண்ணாடி அணிவித்து , அலங்காரம் பூசி காட்டாமல் உள்ளது உள்ளபடி காட்டும்... , வார்த்தைகளின் வலிகளையும் , உணர்வுகளின் நெகிழ்ச்சியையும், செல்லுலாய்டில் செதுக்கும் சிற்பக்காரர் .

இடுப்பு நடனங்கள் , இறுக்க தழுவல்கள்  , இரட்டை அர்த்தங்கள் , ஸ்லீவ் லெஸ் கைகள் , பேன்ட்லெஸ் கால்கள் மட்டுமே மாறி மாறி  காட்டப்படும்  ஐந்து நிமிட பாடல் காட்சியில் , தண்ணீரையும் , காற்றையும் , ஆகாயத்தையும் , மண்ணையும் , தீயையும் , அழகியல் குறையாமல் , ஆகிருதி குறையாமல் காட்டி ஐம்பூதங்களை ஐந்து நிமிட பாடல் காட்சிகளின் கதாநாயகன் ஆக்கிய பராக்கிரமசாலி.

கேளடி கண்மணியில்  குழந்தையின் நோக்கில் தாய் தந்தை பாசத்தின் சமநிலை காட்டி எல்லோர் கண்களிலும் கண்ணீர் துளிகளை பூக்க வைத்து , அதை  தென்றலாய் இசை சாரலோடு உலர வைத்து  ஆரம்பித்த வஸந்த காற்று , நீ பாதி நான் பாதி  , ஆசை , நேருக்கு நேர் , பூவெல்லாம் கேட்டுப்பார், அப்பு , ரிதம்  , ஏய் நீ ரொம்ப அழகாயிருக்க , சத்தம் போடாதே , என்று தொடர்கிறது .. திரையில் இலக்கியத்தையும் , இலக்கியத்தில் திரையையும் அதனதன் பராக்கிரம் குறையாமல் படைக்கும் வித்தையில் விளைந்த  முத்துக்களின் பட்டியலில் , தக்கையின்  மீது நான்கு கண்கள் , விசாரணை கமிஷன் என்ற  சா. கந்தசாமியின் படைப்புகள் செல்லுலாய்டில்  வீரியமாய் விதைக்கப்பட்ட விதைகள் ...

[இயக்குனர் வஸந்த்  பற்றி ஆய்வரங்கில் நான்  எழுதி வாசித்த கட்டுரையின் இனிய பதிவு உங்கள் பார்வைக்கு..  

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...