முப்பத்தாறு வருடங்கள்
கழித்தும் ஒரு சினிமா புதிதாக இருக்கிறது
, அந்த சினிமாவின் மொழி புதிதாய் இருக்கிறது , அந்த சினிமா பேசிய கருத்து புதிதாக இருக்கிறது , அந்த கதாபாத்திரங்கள்
புதிதாய் இருக்கின்றன ,
அந்த பாத்திரங்களின் mannerism , சிந்தனை , செயல் , முடிவுகள் ,
அவர்களின் விவாதங்கள் எல்லாம் இன்றும் விவாதங்களின் மிச்சமாக இன்னும் விவாதிக்க
வேண்டிய பொருளாக இருக்கிறது . அந்த சினிமா
எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை , அது பேச எடுத்துக்கொண்ட
விசயங்களை இன்னும் யாராலும் பேசிமுடிக்க முடியவில்லை . அந்த சினிமா ‘அவள்
அப்படித்தான்’ ,
முப்பத்தாறு வருடங்கள் முன்பு ஒரு இளைஞனின் கோபம் தமிழ் சினிமா மொழியை மாற்றி
எழுத வைத்தது , தமிழ் சினிமா என்ற பிம்பத்தை , அதன் உளுத்து போன பார்முலாவை
உடைத்து எறிய அவன் அதே சினிமாவை ஆயுதமாக எடுத்துக்கொண்டான் .
தொழில்நுட்பத்தையும் , பேசுபொருளையும்
, நடிகர்களையும் மிகச்சரியாய் HANDLE செய்து , BUDGET , ARTIST , MARKETING , என நல்ல
சினிமா எடுக்க எதுவுமே தேவையில்லை , தடையில்லை என நிரூபித்து தமிழ் சினிமாவில்
புதிய அலையை அடிக்க வைத்து ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அந்த
இளைஞனின் பெயர் ‘ருத்ரய்யா’.
expiray date எப்போதும் நல்ல
படைப்புகளுக்கு இல்லை என்பதை அவள் அப்படித்தான் திரைப்படத்தை
பார்க்கும் ஒவ்வொரு முறையும் உணரலாம்
, புதிதாய் அதை தேடி பார்க்கும் ஒவ்வொரு புது ரசிகனும் அதை அனுபவிக்கலாம் .
படம் முழுக்க camera angles , sound mixing , composition of shots , நடிகர்களின் சிறிதும் மிகையில்லாத நடிப்பு என மொத்த
படத்தின் தொழில் நுட்ப நேர்த்தி உலகத்தரத்தில் இருக்க காரணம் சினிமா மொழியை நன்கு
அறிந்த , புதிய பாதை போட வேண்டும் என்ற
கனவுகளோடு இருந்த ருத்ரய்யா .
சமூக சேவகி வீட்டில் கமல் அவரை பேட்டி எடுத்து கொண்டிருப்பார், எல்லோருக்கும்
instructions கொடுத்து விட்டு , டேக் போகும் முன் ஸ்டார்ட் , கேமரா சொல்லி ரோலிங்
சொல்லும் போது அந்த பிலிம் கேமரா ரோல் ஆகும் sound பின்னணியில் கேட்கும் , அந்த
பேட்டி முழுக்க அந்த கேமரா sound மிகைபடுத்த படாமல் live ஆக இருக்கும் , அந்த
சப்தம் அங்கு ஏன் கேட்க வேண்டும் என்றால்
அது தான் தொழில் நுட்ப நேர்த்தி, அது தான்
ருத்ரய்யா.
என்ன MAKE UP போட்டுக்கட்டும் , எப்பவும் போல SOCIETY MAKE UP போட்டுக்கங்களேன்
, ஒரு நிமிஷத்துல முடிச்சுடுறேன் , என்ன கோவத்தையா , அவுங்க
அப்டிதான் இருப்பாங்கன்னா நானும் அப்டி தான் இருப்பேன் என சூழ்நிலைகளை மீறாத வசனங்கள் ,அது தான் ருத்ரய்யா.
அவள் அப்படித்தான் ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தின் design இன்னும் யாராலும் புரிந்து கொள்ள முடியாத ,தொட
முடியாத தூரத்தில் இருக்க , காரணம் அதை
வடிவமைத்த விதம் ,அது தான் ருத்ரய்யா,
ஸ்ரீபிரியா பிளாஷ்பேக்
சொல்லியபடி புரியாத கோபம் வந்து கமலை அடிக்க ஆரம்பித்து , கத்தி எடுத்து கொல்ல
முயற்சித்து ,, டாய்லெட்டில் கட்டி
அணைத்து தேம்பும் ஒரு காட்சி ,அது தான் ருத்ரய்யா.
கமல் documentry ஷூட் செய்ய பெண்களிடம் கேள்வி கேட்க அவர்கள் சண்டை போட்டபடி
பதில் சொல்ல , பெண்கள் பற்றி படம் முழுக்க ரஜினி பேசும் விஷயங்கள் , என எந்த
கருத்தையும் யார் மீதும் திணிக்காத , யார் சரி , யார் தவறு என judjement சொல்லாத ,
இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து புதிய சிந்தனையை தூண்ட , சினிமாவை பேச வைத்தவர் அவர் தான் ருத்ரய்யா.
காலம் கடந்து ஏன் இந்தப்படம் பேசப்படுகிறது , ஏன் ரசிக்கபடுகிறது , மாணவனாக
இருந்தபடி ஒரு ஆசிரியராக செயல்பட்டிருக்கிறார் ருத்ரய்யா , படம் முழுக்க நாம்
கற்றுக்கொள்ளப்பட வேண்டிய பாடங்களை புதைத்து வைத்திருக்கிறார் .
கால சுழற்சியில் பார்முலா பந்தய சினிமாவை , உளுத்து போன ஓட்டைகளை சீர் செய்ய
கோபம் கொண்டு கேமரா தூக்கும் ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ருத்ரய்யாவின் விதை
இருக்கும் என்பது தான் ருத்ரையாவின் வெற்றி ..
அப்படி புதிய படைப்புகள் வரும் நாள் எல்லாம் ருத்ரய்யா வாழ்வார் . ஏனென்றால்
ருத்ரையாக்கள் எப்போதும் மறிப்பதில்லை .
[ ருத்ரய்யா மறைந்த போது எழுதப்பட்ட பதிவு ]
No comments:
Post a Comment