Monday, April 20, 2015

O.K KANMANI [ ஓ.காதல் கண்மணி ]

காரா .. ஆட்டோகாரா .. காத்திருக்கேன்டா ...
மன மன மெண்டல் மனதில் ..
தீரா,... உலா ....என western ஆக போய் கொண்டிருக்கும் படம் இடை இடையே யூ டர்ன் அடித்து...
 நானே வருகிறேன் , நானே னே னே னே  வரு ரு ரு கிறேன் ..
மலர்கள் கேட்கிறேன் மணமே தந்தனை என tradional பேச ஆரம்பிக்கிறது ...
கலாச்சார புரட்சி என சப்தம் கொடுத்து விட்டு ,
கலாச்சாரம் காப்போம் என்ற கருத்து , அது தான், அது மட்டும் தான்  நல்லது என TAKE HOME ,

இளமை துள்ளி குதிக்கும் இசை புயலின் இசை ,
P.C வைக்கும் புதிய கோணங்கள் ,
மணிரத்னத்தின் அழகான MAKING ..
என கொண்டாட அத்தனை காரணங்கள்  இருக்கிறது படத்தில் ..
பார்க்கும் ரசிகர்களும்  கொண்டாடுகிறார்கள் ..

சுயமாய் சிந்திக்கும் ,சுயமாய் முடிவு எடுக்கும் தலைமுறை
ஏன் கடைசியில் , போட்டு வைத்த பாதையில் போக வேண்டும் ,
அது தான் பண்பாடு , கலாச்சாரம் , கட்டுப்பாடு ,
அப்படியென்றால் ஆரம்பத்தில் எதற்கு அத்தனை முற்போக்கு கட்டிப்பிடிகள் , முத்தங்கள் என புரியவில்லை ..
ஒருவேளை மணி ஸார் இந்த INSTANT கலாச்சார  காவலர்களை பார்த்து கொஞ்சம் பயந்து விட்டாரா என கேட்க வைக்கிறது சுப மங்கள கிளைமாக்ஸ் ...

ஆனாலும் எப்போதும் மணிரத்னம் பிடித்த இயக்குனராகவே இருந்து விடுகிறார் ..

container is important than content என்பது மார்க்கெடிங் புகழ் மொழி ..
மணி சார் container எப்பவும் பிரமாதமாக இருக்கும் ..
என்ன content சில சமயம் பழசாக இருக்கும் ..

ஓகே கண்மணி ,
CONTENT பழசு CONTAINER புதுசு ...


No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...