
எனக்காய் பூமியில் வந்த சாமியம்மா நீ
சுயமாய் ஒரு உரு தந்தாய்
சுவாசம் கற்று தந்தாய்
உள்ளோடும் உதிரத்தில் கலந்திருந்தாய்
தள்ளாட்ட நடையில் என்னை தளுவியிருந்தாய்
அழாமல் ஆகாரம் தந்தாய்
அழும் முன்னே ஆறுதல் தந்தாய்
என் சுமைகள் இறக்கி வைத்து
உன் சுமைகள் ஏற்றி கொண்டாய்
என்னை சிரிக்க வைக்க உன் சிரிப்பு மறந்து
என்னை உறங்க வைக்க உன் உறக்கம் மறந்து
எனக்காகவே பூமியில் வந்த சாமியம்மா நீ ..
No comments:
Post a Comment