Friday, April 17, 2015

அவன் மாறவில்லை ...

அவன் மாறி விட்டான்
அவன் யார்???
 அவன் தான் இந்த ஜனனத்திரளின் அடையாளம் ,
அவன் தான் மனிதன் , அவன் மாறிவிட்டான் என்பதை தான் யுகம் , கனம் , திடம் எல்லாவற்றிடமும்  சொல்லி திரிகின்றான் ..அவன் உண்மையில் மாறி விட்டானா ?உண்மையான பதில் இல்லை ..
அவன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டு இருக்கிறான் , மாறி விட தான் துடிக்கிறான் , மாறி விட்டதாக நம்புகிறான் , மாறி விட்டதாக நடிக்கிறான் , ஆனால் அவனால் மாற முடியவில்லை என்பதை அவன் ஒப்பு கொள்கிறான் ,
அது தான் அவனை மாற்றத்தை நோக்கி உந்து தள்ளுகிறது , மாற்றத்துக்கான விதையை , பிடியை தேடி அலைகிறான் ,
அந்த அலைச்சலில் கிடைக்கும் சில வெற்று சிப்பிகளில்  ஏமாற்றம் கண்டு வெறுங்கையுடன் திரும்ப மனமில்லாமல் , மாற்றம்  என்ற பொய்களை விதைத்து அதை நம்ப தயாராகிறான் ,
அந்த நம்பிக்கை சில காலம் அவனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது , அதன் ஈர்ப்பு குறையும் போது அவனுக்கு புரிந்து விடுகிறது தான் இன்னும் மாறவில்லை , மாற்றம் என்ற மாயையில் சிக்கி கொண்டிருக்கிறோம் என ..
மறுபடியும் ஓட்டம் , மறுபடியும் மாற்றம் என அவன் நிகழ்த்தும் இடைவிடாத ஓட்டம் அவனுக்கு ஒன்றை உணர்த்துவதாக இருக்கிறது ,  அவன் மாற்றத்துக்காக விதைக்கபட்டவன் , மாற்றத்தை நோக்கிய அந்த பயணம் எல்லையில்லாததாக இருக்கிறது , இன்னும் எத்தனை தூரம் ஓடினால் மாறலாம் என்பது புலப்படவில்லை , ஆனால் ஓட வேண்டும் மாற்றத்தை நோக்கி , இந்த மாற்றம்  என்பது அவனின் பரிணாமம் சார்ந்த மாற்றமா , பரிணாமத்தின் எல்லையில் நிற்கும் இவன் அதன் கடைசி புள்ளியா , அடுத்த புள்ளி தான் இவனின் மாற்றமா என்பதை கண்டு கொள்ள இவன் வெகு தூரம் செல்ல  வேண்டும் , அதுவரை  இணையத்தின் பிடிக்குள் இருக்கும் ஸ்மார்ட் போன்களும் , செயற்கைகோள்களும் , பிரித்தெடுக்கபட்ட டி.என்.ஏ க்களும் ,  மாற்றம் என நம்பி விளையாடிக்கொண்டிருப்பான் ...
சிறிதாய் இருள் கவியும் இரவுகள் பயத்தை விதைக்கும் நேரங்களில்  தெரிய வரும் தான் இன்னும் மாறவில்லை ..
 அவன் கால்கள் ஓட்டம் எடுக்க தயராகும் மாறிவிட வேண்டும் என ...

1 comment:

க. தங்கமணி பிரபு said...

நன்று சொன்னீர்கள்

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...