Monday, February 16, 2009

சாலையில் செல்லும்
ஆண்களை அழைத்து
மனைவிக்கு பூ வாங்கிச் செல்ல சொல்வாள்
அந்த பூக்காரி ...
பூக்கள் எல்லாம்
விற்று தீர்ந்த பின்
எண்ணிக் கொள்வாள்
தன் கணவன்
எந்த பூக்காரியிடம்
பூ வாங்கி வருவான் என ...!

No comments:

முத்தம்

  உன் மீதான  என் அன்பு,  என் பிரியங்கள் ,  மட்டும் தான் மிகப் பெரிதென நினைத்திருந்தேன்   .  நீ உதடு அழுத்தி கொடுத்த  ஒரு முழு முத்தம் என், எ...